Wednesday 20 November 2013

பேன், பொடுகு தொல்லையா?

பேன், பொடுகு தொல்லை பெண்களுக்குப் பெருந்தொல்லை. பேன் கூட பரவா‌யி‌ல்லை கா‌ட்டி‌க் கொடு‌ப்ப‌தி‌ல்லை. ஏனென்றால், பேனும் கருப்பு, தலை முடியும் கருப்பு. ஆனால் பொடுகு அப்படியில்லை. கருப்பான தலைமுடியில் பளிச்சென வெள்ளையாக காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த பேன், பொடுகு பிரச்சனைகளுக்கு எவ்வளவோ செலவு செய்பவர்களையும் நாம் பார்க்கிறோம். மேலும், பொடுகை ஒழிக்க வேண்டுமா? என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து அவற்றை வாங்கிப் போட்டு தலைமுடியை ஒழிக்கும் ஷாம்புகளையும் பார்க்கிறோம்.

ஆனால், இவையெல்லாம் இல்லாமல் எளிமையான இயற்கை முறையில் எப்படி ஒழிப்பது என்பதை இப்போது பார்ப்போம்: பெரும்பாலும் தலையில் அழுக்கு சேர்வதாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்திய சீப்பை பயன்படுத்துவதாலும்தான் தலையில் பேன் உருவாகிறது.

வசம்புவை தண்ணீர் விட்டு அரைத்து, அதனை தலையில் தேய்த்து நன்றாக ஊரவிட்டு பின் தலையை அலசினால் பேன் ஓடியேவிடும்.

No comments:

Post a Comment