Thursday 21 November 2013

‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ள்

எலுமிச்சைத் தோலின் சாற்றை உதட்டின் மீது தடவி வந்தால் கருத்த உதடுகள் மறையும்.

கொத்தமல்லி சாறை எடுத்து உதடுகளில் தினசரி தடவி வந்தால் உதடுகள் மென்மையாக இருப்பதோடு பளபளப்பாக இருக்கும்.

முடி நன்றாக வளர தலையில் தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் நன்றாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் முடி மென்மையாக பளபளவென்று வளரும்.

சின்ன வெ‌ங்காயத்துடன் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதனை தலையில் தேய்து பிறகு ஷம்பூ போட்டு அலசி வரவும்.

ஆலிவ் எண்ணெய், எலு‌மி‌ச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சுட வைத்து ஒரு டவலில் நனைத்து அதனை சூடாக இருக்கும்போது தலையில் கட்டிக் கொள்ளவும் பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.

சாதம் வடித்த நீருடன் சீகக்காய் கலந்து அதை‌க் கொ‌ண்டு முடியை தே‌ய்‌த்து‌வி‌ட்டா‌ல் முடி பளபள‌க்கும்.

No comments:

Post a Comment