Tuesday 3 December 2013

பு‌தினா சாத‌ம்

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2கப்

புதினா - 1கப், இஞ்சி, பூண்டு - ‌சி‌றிது

பச்சை மிளகாய் - 3 நம்பர் நீளவாக்கில் நறுக்கியது, கறிவேப்பிலை

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/2கப் நீளவாக்கில் நறுக்கியது

சின்ன வெங்காயம் - 1கப் நீளவாக்கில் நறுக்கியது

பட்டை, லவங்கம், ஏலக்காய் - 3 நம்பர்

தேங்காய் பால் - 1கப், தண்ணீர் - 1/2கப்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2ஸ்பூன்

செய்முறை:-


பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம், புதினா, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்கி மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.

அதனுடன் ஊறிய அரிசி, அரைத்த கலவை, தேவையான அளவு உப்பு, தேங்காய் பால், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 1 விசில் 5 நிமிடம் வந்தவுடன் அணைத்து விடவும். ‌ விசில் சத்தம் அடங்கியவுடன் தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும். சுவையான புதினா சாதம் தயார்.

No comments:

Post a Comment