Sunday, 2 February 2014

முக அழகைப் பேணுவது அவசியம்

அம்மைத் தழும்புகள் மறைய, ஒரு  எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து  செய்துகொண்டே வந்தால் தழும்புகள்  மறைந்துவிடும்.

முகத்தில் ஏற்படும் கருப்பைப் போக்க எலுமிச்சம் பழம் உதவும். ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.

5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

முகப்பரு அகல நாட்டு மருந்து கடையில் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும். கு ளி ர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து குளிக்கலாம்.

No comments:

Post a Comment