Monday, 3 March 2014

சமையலறை சமா‌ச்சா‌ர‌ங்க‌ள்

ஒரு பாத்திரத்தில் குளிர் நீரை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து உரித்த உருளைக் கிழங்குகளை போட்டு வைத்தால் உருளை புதிதாக இருப்பதுடன் வெள்ளை நிறம் கெடாமல் இருக்கும்.

பால் காய்ச்சுவதற்கு முன் அந்த பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றினால் பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.

சமையல் எண்ணெயில் ஊசல் வாடை வராமல் தடுக்க அதனுடன் 6-7 பச்சை மிளகாய்களை சேர்க்கவும்.

சப்பாத்தி அல்லது பூரி மாவில் சிறிதளவு எண்ணெயை தெளித்து வைத்தால் நீண்ட நேரத்திற்கு மாவை கெடாமல் பாதுகாக்கலாம்.

சப்போட்டா, அன்னாசிப்பழம் ஆகியவற்றை குளிர் சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது அது ஓரளவு வெப்பமான சூழ்நிலையில்தான் கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment