Sunday 22 May 2016

சாம்பார் பொடி செய்வது எப்படி

தேவையான பொருள்கள்:

  • துவரம் பருப்பு - 100 கிராம்
  • கடலைப்பருப்பு - 50 கிராம்
  • மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மல்லி (தனியா) - 1/2 கிலோ
  • மிளகு - 20 கிராம்
  • சீரகம் - 20 கிராம்
  • வெந்தயம் - 5 கிராம்
  • பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

  • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
  • இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் ககவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு:
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment