தேவையான பொருள்கள்:
- துவரம் பருப்பு - 100 கிராம்
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மல்லி (தனியா) - 1/2 கிலோ
- மிளகு - 20 கிராம்
- சீரகம் - 20 கிராம்
- வெந்தயம் - 5 கிராம்
- பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
- இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் ககவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு:
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment