Sunday, 9 March 2014

விழுதுகள் வீணாகாமல் இருக்க

இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அரைத்த விழுதுகள் வீணாகாமல் இருக்க, ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிறகு ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள். வாரமானாலும் வீணாகாது.

தயிர் அதிக புளிப்பாக இருந்தால், 4 கப் தண்ணீரை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, தயிர் மேல் தண்ணீர் தனியாக நிற்கும். இந்தத் தண்ணீரை தனியாகப் பிரித்துவிட்டால் புளிப்புக் குறைந்து விடும்.

பழைய சா‌ப்பா‌ட்டை ஒரு முறை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து லேசாக த‌ண்‌ணீ‌ர் கொ‌தி‌த்தது‌ம் வடி‌த்து சா‌ப்‌பிடு‌ங்க‌ள். பு‌திய சா‌ப்பாடு போல இரு‌க்கு‌ம்.

மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், சிறிதளவு உப்பு தண்ணீரை அதன் மீது வறுப்பதற்கு முன் தெளிக்கவும்.

சப்பாத்தி மாவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்தால், சப்பாத்தி மிகவு‌ம் ‌மிருதுவாகக் காணப்படும்.

No comments:

Post a Comment