Thursday 28 November 2013

தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை:

தேங்காய் - 1

உருளைக்கிழங்கு - 3

மிளகாய் - 4

மல்லி, சீரகம், 2 தேக்கரண்டி

கத்தரிக்காய் - 4, பீர்க்கங்காய் - 1

பூண்டு - 3 ப‌ல்

எப்படி செய்வது?

தேங்காயைத் துருவி முத‌லி‌ல் கெட்டியாக பா‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இர‌ண்டாவதாக எடு‌க்கு‌ம் பாலை த‌னியாக வை‌க்கவு‌ம். பூ‌ண்டு, ‌மிளகா‌ய், ம‌ல்‌லி, ‌சீரக‌ம் ஆ‌கியவ‌ற்றை அரை‌க்கவு‌ம்.

கா‌ய்க‌றிகளை வெ‌ட்டி அ‌தி‌ல் அரை‌த்த மசாலா, உ‌ப்பு சே‌ர்‌த்து இர‌ண்டாவதாக எடு‌த்த‌ப் பாலை சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.

வெந்தவுடன் கெட்டிப் பாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சத்தூள் போடவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டுத் தாளித்துக் கொட்டவும்.

பா‌தி எலுமிச்சம்பழம் அ‌ல்லது பு‌ளி‌த் த‌ண்‌ணீ‌ர் கல‌ந்து லேசாக கொ‌தி‌க்க ‌வி‌ட்டு இறக்கவும். சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்.

No comments:

Post a Comment