Thursday, 6 March 2014

சமையலறை ரக‌சிய‌‌ங்க‌ள்

காய்கறிகளில் உப்பு அதிகமாக சேர்த்து விட்டால், கோதுமை மாவை உருட்டி அதில் தோய்த்து எடுக்கவும், அதேபோல் எதோ ஒன்றில் காரம் அதிகமாக சேர்த்துவிட்டால் காரத்தை குறைக்க எலுமிச்சை சாற்றை சில சொட்டுகள் விடவும்.

சமைக்கப்படாத பச்சை இறைச்சியை மிருதுவாக்க எலுமிச்சையை தேய்க்கலாம் அல்லது வாழையிலையில் சுற்றி வைக்கலாம்.

தக்காளிகள் சீக்கிரம் கெடாமல் பாதுகாக்க, ஐஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதிகம் பழுத்த தக்காளிகளை அதில் போட்டுவைக்கலாம்.

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment