Monday, 17 March 2014

ப‌த்‌திரமா பா‌‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்

கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம்.

க‌ஸ்தூ‌ரி ம‌ஞ்சளை முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும்.

உருளைக் கிழங்கை அரைத்து பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உலர்ந்த சருமத்திற்கு நல்லது.

அரைத்த உருளைகிழங்கை, எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் பசையை போக்கும்.

ஊரவைத்த பாதாம் பருப்பையும், உருளைக் கிழங்கையும் அரைத்து கண்களுக்குக் கீழே தடவி வந்தால் வீக்கத்தை குறைக்கும்.

No comments:

Post a Comment