Monday, 30 December 2013

உட‌ல் நலமே அழகு‌க்கு அடி‌ப்படை

வெள்ளரிச் சாறை தயார் செய்யுங்கள். அதனுடன் கொஞ்சம் பன்னீர் சேர்த்து கண்களைச் சுற்றித் தடவுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால் கருவளையங்கள் காணாமல் போகும்.

மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள்.

தொற்றுநோய்கள் தொற்றாமல் தடுக்க தினசரி ஐந்து துளசி இலைகளை மெல்லுங்கள்.

வாய் நாற்றம் ஏற்பட்டால் காலையில் குறைந்து ஐந்து குவளை தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வயிற்றுவலியா? சிறிது சீரகத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மெல்லுங்கள்.

No comments:

Post a Comment