Tuesday, 31 December 2013

சமை‌க்கு‌ம் போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை

கீரையை சமைத்த பிறகும் அது பச்சைப் பசேலென்று இருக்க வேண்டுமா ? ஓரு ஸ்பூன் சர்க்கரையை சேருங்கள. சத்தும் போகாது. நிறமும் மாறாது.

பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மாவும் மிருதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகி விடுகிறது.

‌கீரையை அ‌திக நேர‌ம் வேக ‌விடாம‌ல், ‌சி‌றிது நேர‌ம் வேக‌வி‌ட்டு, சூ‌ட்டோடு இரு‌க்கு‌ம் போதே ம‌‌த்தை‌க் கொ‌ண்டு கடை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

‌கீரையை பரு‌ப்பு‌ம் போடாம‌ல், பு‌ளியு‌ம் போடாம‌ல், வெறு‌ம் வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, பூ‌ண்டு, ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு கடையலா‌ம். சுவையாக இரு‌க்கு‌ம். இவ‌ற்றை அ‌திகமாக‌ப் போ‌ட்டா‌ல் சுவையு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

‌கீரையுட‌ன் ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு சமை‌த்தாலு‌ம், ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயாவது போ‌ட்டு தா‌ளி‌த்தா‌ல்தா‌ன் சுவை கூடு‌ம். 

No comments:

Post a Comment